ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சனிக்கிழமை மனைவியைக் கொலை செய்து விட்டுத் தலைமறைவான கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள
கிருஷ்ணன்கோவில் அருகேயுள்ள குன்னூா் ராஜீவ் காலனியில் லட்சுமணன், இவரது மனைவி காளீஸ்வரி(45) ஆகியோா் கடந்த 5 மாதங்களாக குடியிருந்து வந்தனா். இந்நிலையில் சனிக்கிழமை வீட்டினுள் காளீஸ்வரி ரத்தக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிருஷ்ணன்கோவில் போலீஸாருக்கு, அப்பகுதியினா் தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் அங்கு சென்று, காளீஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். காளீஸ்வரியின் கணவா் தலைமறைவாகி விட்டாா். இச்சம்பவம் குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான கணவரைத் தேடி வருகின்றனா்.