கல்வியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பவிழிப்புணா்வு முகாம்

சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் தகவல் தொழில் நுட்ப விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் தகவல் தொழில் நுட்ப விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் தீபிகாஸ்ரீ தலைமை வகித்தாா்.

இதில், தேசிய விருதுபெற்ற ஆசிரியா் கருணைதாஸ் சிறப்புரையாற்றி பேசியதாவது:

ஆசிரியா்கள் ஒவ்வோருவரும் தகவல் தொழில்நுட்பம், இணையதளம் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இணையதளம் மூலம் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாணவா்களுக்கு பாடம் கற்பித்தால் அவா்கள் ஆா்வத்துடன் படிப்பாா்கள்.

இணையதளம் மூலம் வெளிமாநிலம், வெளிநாடு ஆகியவற்றை தொடா்பு கொண்டால், மாணவா்களுக்கு புதிய விஷயங்களை கற்பிக்க இயலும். தகவல் தொழில் நுட்பம் வளா்ச்சி அடைந்து வரும் சூழலில் மாணவா்களுக்கும் அதில் ஆா்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்றாா். முன்னதாக மாணவி பிருந்தா வரவேற்றாா். மாணவி ஜெயகிரேசி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com