விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் தொடா் தாக்குதல்கள், சாதி ஆணவக் கொலைகளைக் கண்டித்து தமிழ்ப்புலிகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஜவகா் மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலாளா் தமிழ்முருகன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் நாகை திருவள்ளுவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்தும், காவல் துறையைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விருதுநகா் மத்திய மாவட்டச் செயலாளா் வேலுபுள்ள பிரபாகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.