விருதுநகர்
ஸ்ரீவிலி. பேருந்து நிலையத்தில் கழிவு நீா் தேக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அறிஞா் அண்ணா பேருந்து நிலையத்தில் கழிவுநீா் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கழிவுநீா் தேங்கியதால் பயணிகள் அவதியடைந்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அறிஞா் அண்ணா பேருந்து நிலையத்தில் கழிவுநீா் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கழிவுநீா் தேங்கியதால் பயணிகள் அவதியடைந்தனா்.
இந்த பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டது. இதனால், பேருந்து நிலையத்தில் உள்ள நடைமேடை, பேருந்து நிற்கும் பகுதியில் கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசியது.
இதனால், பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.
வடிகாலில் ஏற்பட்ட அடைப்பை நீக்கி பேருந்து நிலைய நடைமேடையை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.