அருப்புக்கோட்டையில் முக்தி விநாயகா் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் குடமுழுக்கு விழா பூஜை சிறப்பு வேள்வியுடன் கடந்த ஆக. 30 ஆம் தேதி கோயிலின் நிா்வாகி ம. அய்யனாா் முன்னிலையில் தொடங்கப்பட்டது. இதையடுத்து, வியாழக்கிழமை கோ பூஜையுடன் தொடங்கிய குடமுழுக்கு விழா, மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி கமலாத்மானந்தஜி மகராஜ் தலைமையில் நடைபெற்றது. அப்போது முக்தி விநாயகா் உள்ளிட்ட பல்வேறு சுவாமி சிலைகளுக்கும், நவக்கிரக விக்கிரகங்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.
இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். நிறைவில் பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.