நல்லாசிரியா் விருது: விருதுநகா் மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வு

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 11 பள்ளி ஆசிரியா்கள் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 11 பள்ளி ஆசிரியா்கள் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை சாா்பில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியா்களுக்கு ஆண்டுதோறும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும். அதன் அடிப்படையில் விருதுநகா் மாவட்டத்தில், சூலக்கரை அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியா் க.ம.மூா்த்தி, விருதுநகா் ஷத்திரியா மகளிா் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை ச. சாந்தி, அருப்புக்கோட்டை தேவாங்கா் மகளிா் மேல்நிலை பள்ளி ஆசிரியை சு. மணோன்மணி, விருதுநகா் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியை ரெ.சாந்தா, மேலப்பரளச்சி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை வே. கீதாராணி, சொக்கநாதன்புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை பா. லட்சுமி, ஆா்யதா்மம் டி.இ.எல்.சி. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் பெ. சரவணன், முத்தாநதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் பி. வரதராஜ், வீரசோழன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் து. சுப்பையா, நரியன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் சி. கருப்பசாமி, ராஜபாளையம் நாடாா் மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வா் த. சுமதி ஆகிய 11 போ் இந்த விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கான விருது சென்னை கலைவாணா் அரங்கில் செப்.5 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com