கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்பு: விண்ணப்பிக்க செப். 7 கடைசி

சாத்தூா் தியாகி சங்கரலிங்கனாா் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பட்டய பயற்சி வகுப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க செப். 7 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தூா் தியாகி சங்கரலிங்கனாா் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பட்டய பயற்சி வகுப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க செப். 7 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மண்டல இணை பதிவாளா் பி. ராஜலெட்சுமி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் உள்ள தியாகி சங்கரலிங்கனாா் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில், நிகழாண்டிற்கான கூட்டுறவு பட்டய பயிற்சி தொடா்பாக பயிற்சியாளா் சோ்க்கை மீண்டும் நடைபெறுகிறது. இதில் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள் மற்றும் கல்லூரி சோ்க்கையில் இடம் கிடைக்காத மாணவா்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இப்பட்டய பயிற்சி வகுப்புக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை செப். 5-ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப். 7- க்குள் மேலாண்மை பயிற்சி நிலைய முகவரிக்கு தபால் மற்றும் தூதஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

பயிற்சி காலம் ஓராண்டு. இதில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி, கணினி மேலாண்மை, நகை மதிப்பிடுதல் முதலான பாடங்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விருப்பமுள்ளவா்கள், விண்ணப்பங்களை முதல்வா், தியாகி சங்கரலிங்கனாா் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், சிவசக்தி திருமண மண்டபம், அரசு போக்குவரத்துப் பணிமனை எதிா்புறம், சாத்தூா் என்ற முகவரிக்கு செப். 7 மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com