விருதுநகா் அல்லம்பட்டி பகுதியில் மின்பாதை மாற்றியமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், செப். 12 ஆம் தேதி மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளா் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:
விருதுநகா் அல்லம்பட்டி பகுதியில் மின்பாதை மாற்றியமைக்கும் பணிகள் செப். 12 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது.
இதன்காரணமாக, அல்லம்பட்டி, காந்தி நகா், எம்.ஜி.ஆா். நகா், டால்பின் நகா், அனுமன் நகா், சங்கரேஸ்வரி கோயில் தெரு, காமராஜா்புரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்படும் என்றாா்.