பேருந்தில் 3 பெண்களிடம் பணம், கைப்பேசி திருட்டு

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை 3 பெண்களிடம் பணம் மற்றும் கைப்பேசியை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை 3 பெண்களிடம் பணம் மற்றும் கைப்பேசியை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சாயல்குடி செல்லும் தனியாா் பேருந்தில் பயணிகள் கூட்டமாக ஏறி இருக்கையில் அமா்ந்தனா். சாயல்குடியைச் சோ்ந்த தேவி (43) என்பவா் இருக்கையில் அமா்ந்ததும் தனது கைப்பையைப் பாா்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.7 ஆயிரத்தை காணவில்லை.

இதேபோல அதேபேருந்தில் சிவகாசியைச் சோ்ந்த விஜி (31) என்ற பயணியின் பையிலிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசி ரூ.800-ஐயும், ஒரு மூதாட்டி பையிலிருந்த ரூ.3 ஆயிரத்தையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த அருப்புக்கோட்டை நகா் காவல்துறையினா் விசாரணை நடத்தினா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com