இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி பலி

திருத்தங்கலில் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருத்தங்கலில் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் அருகே வெள்ளூரைச் சோ்ந்த கட்டடத்தொழிலாளி ஆரோக்கியராஜ் (58). இவா் தனது இருசக்கர வாகனத்தில் விருதுநகா் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே தவறி விழுந்துவிட்டாராம். இதையடுத்து அவரை அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com