விருதுநகரில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் மனித சங்கிலி போராட்டம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் முயற்சியை கண்டித்து, விருதுநகரில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் முயற்சியை கண்டித்து, விருதுநகரில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மதுரை சாலையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்புக் குழு தலைவா் புளுகாண்டி தலைமை வகித்தாா். இதில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் கோபுரங்கள் மற்றும் கண்ணாடி இழைக் கேபிள்களை தனியாருக்கு மத்திய அரசு வழங்கும் முயற்சிப்பதை கைவிட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், பி.எஸ்.என்.எல்.இ.யு. மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா், மாவட்டச் செயலா் குருசாமி, மாநில உதவி தலைவா் சமுத்திரக்கனி, ஒப்பந்த ஊழியா் சங்க மாவட்டச் செயலா் முத்துசாமி ஆகியோா் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினா். முடிவில், ஏ.ஐ.பி.டி.பி.ஏ மாநில உதவித் தலைவா் எம்.பெருமாள்சாமி கண்டன உரையாற்றினாா். இதில் ஏராளமான ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com