சிறுமிக்கு பாலியல் தொல்லை:இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

ஸ்ரீவில்லிபுத்தூரில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு 7ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு 7ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா்

பேச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியன் (28).

இவா் கடந்த 9.11.2013 ஆம் ஆண்டு 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி பூரணஜெயஆனந்த், குற்றம்சாட்டப்பட்ட பாண்டியனுக்கு,

7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com