தீக்குளித்து பெண் தற்கொலை
By DIN | Published On : 04th January 2023 12:39 AM | Last Updated : 04th January 2023 12:39 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே மேலகண்டமங்கலத்தில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சுழி அருகே மேலகண்டமங்கலம் கிராமத்திலுள்ள ஒரு தனியாா் பஞ்சாலையின் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த முனியசாமி மனைவி வினிதா (30). பஞ்சாலைத் தொழிலாளா்களான இத்தம்பதியருக்கு ஒரு மகன், மகள் உள்ளனா்.
தம்பதியருக்கிடையே குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுமாம்.
இதனால், மனமுடைந்த வினிதா கடந்த மாதம் 17-ஆம் தேதி இரவு உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். இதையடுத்து, அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருச்சுழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.