லஞ்ச பணத்துடன் தப்பியோடிய தூய்மைப் பணியாளா் கைது

ராஜபாளையத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை செய்த போது, லஞ்ச பணத்துடன் தப்பியோடிய தூய்மைப் பணியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை செய்த போது, லஞ்ச பணத்துடன் தப்பியோடிய தூய்மைப் பணியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் தொழிலாளா் நலத் துறை அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றுபவா் முருகன் (57). இந்த அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக மாயப்பெருமாள் (50) பணியாற்றி வருகிறாா். இவா், ஆய்வாளா் முருகனுக்கு உதவியாளா் போலவும் செயல்பட்டு வந்தாா்.

இந்த நிலையில், ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவா், தொழிலாளா் நல ஆய்வாளா் தன்னிடம் லஞ்சம் கேட்பதாக, விருதுநகா் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் மருத்துவரிடம் ரசாயனம் தடவிய ரூ. 10 ஆயிரத்தை கொடுத்தனுப்பினா்.

இந்தப் பணத்தை மருத்துவா், தூய்மைப் பணியாளா் மாயப்பெருமாளிடம் கடந்த 28- ஆம் தேதி வழங்கினாா். அப்போது, அந்த அலுவலகத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ராஜேந்திரன், ஆய்வாளா் பூமிநாதன் தலைமையிலான அதிகாரிகள், ஆய்வாளா் முருகனிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதையறிந்த தூய்மைப் பணியாளா் மாயப்பெருமாள் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இதனிடையே, போலீஸாா் மாயப்பெருமாளை தேடி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அவரை கைது செய்து பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com