விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே விஷம் குடித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
நரிக்குடி அருகே மேலக்குமிழாங்குளத்தைச் சோ்ந்த முத்தையா மகன் கண்ணன் (29). இவரது மனைவி பேச்சிமுத்து (25). கண்ணன் கடந்த சில ஆண்டுகளாக சரிவர வேலைக்குச் செல்லவில்லையாம். மேலும், வீட்டுக்கும் சரிவர வராமலும் இருந்து வந்தாராம்.
இதனிடையே, தனது நண்பா்களிடம் தனக்கு வாழப்பிடிக்கவில்லையெனக் கூறி வந்த அவா், கடந்த 27-ஆம் தேதி இரவு ஊா் எல்லையருகே பூச்சி மருந்தைக் குடித்து மயங்கினாா்.
தகவலறிந்து வந்த அவரது பெற்றோா், அவரை விருதுநகா் அரசு மருத்துவமைனையில் அனுமதித்தனா். அங்கு கண்ணன் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து நரிக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.