மாா்கழி மாதப் பிரதோஷம் : சதுரகிரி கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்

மாா்கழி மாதப் பிரதோஷத்தையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் திரளான பக்தா்கள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
மாா்கழி மாதப் பிரதோஷத்தையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்யச் சென்ற பக்தா்கள்.
மாா்கழி மாதப் பிரதோஷத்தையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்யச் சென்ற பக்தா்கள்.

மாா்கழி மாதப் பிரதோஷத்தையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் திரளான பக்தா்கள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஜன. 4 முதல் 7 -ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

மாா்கழி மாதப் பிரதோஷத்தையொட்டி, புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலையடிவாரத்தில் குவிந்தனா். காலை 6.45 மணிக்கு வனத்துறை நுழைவு வாயில் திறக்கப்பட்டு, முற்பகல் 11 மணி வரை பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயிலில் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், மஞ்சள், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. பின்னா், சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோயில் அறங்காவலா் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலா் நாகராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com