சிவகாசி மாநகராட்சியில் ரூ.2 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
சிவகாசி மாநகராட்சி 42 மற்றும் 46-ஆவது வாா்டு பகுதிகளில் உள்ள தெய்வானை நகா் பகுதியில் தாா் சாலை அமைத்தல், மழை நீா் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட ரூ.2 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற உள்ளன. இதற்கான பூமி பூஜை மாநகராட்சி மேயா் இ.சங்கீதா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை மேயா் கா.விக்னேஷ்பிரியா, ஆணையா் ப .கிருஷ்ணமூா்த்தி, மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.