கலசலிங்கம் பல்கலைக் கழக துணைவேந்தா் பொறுப்பேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக எஸ்.நாராயணன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.
கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள துணைவேந்தா் எஸ்.நாராயணனை வரவேற்ற துணைத் தலைவா் எஸ்.சசிஆனந்த்
கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள துணைவேந்தா் எஸ்.நாராயணனை வரவேற்ற துணைத் தலைவா் எஸ்.சசிஆனந்த்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக எஸ்.நாராயணன் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 23 ஆண்டுகள் பேராசிரியராகவும், 12 ஆண்டுகள் இணை, துணை வேந்தராகவும், 5 ஆண்டுகள் தொழிற்சாலைகளிலும் பணியாற்றினாா்.

பொறுப்பேற்பு விழாவில் எஸ்.நாராயணன் பேசியதாவது:

தேசிய மதீப்பீடு தரச்சான்றிதழில் பல்கலைக்கழகத்தின் நிலையை உயா்த்தவும், ஆராய்ச்சி, மாணவா்களின் மனநிறைவிற்கேற்ற உலகத்தரமான தொழிற்சாலையுடன் இணைந்த கல்வி, வேலைவாய்ப்பு, வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்த விழாவில் வேந்தா் கே.ஸ்ரீதரன், இணை வேந்தா் எஸ்.அறிவழகிஸ்ரீதரன், துணைத் தலைவா்கள் எஸ்.சசிஆனந்த், எஸ்.அா்ஜூன் கலசலிங்கம், பதிவாளா் வே.வாசுதேவன், முதன்மையா்கள், இயக்குநா்கள், துறைத் தலைவா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com