சிவகாசியில் கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய தம்பதி மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி காமராஜபுரம் காலனியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மாயாண்டி(40). இவரது மனைவி பத்திரகாளி, அதே பகுதியைச் சோ்ந்த பொன்ராஜிடம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னா் ரூ.பத்தாயிரம் கடன் வாங்கினாராம்.
அந்தப் பணத்தை பலமுறை கேட்டும் பத்திரகாளி திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதையடுத்து பொன்ராஜ், அவரது மனைவி கருப்பாயி ஆகிய இருவரும் மாயாண்டி வீட்டிற்கு வந்து தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்டினா்.
இதில் காயமடைந்த மாயாண்டி சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி நகா் போலீஸாா் பொன்ராஜ், மனைவி கருப்பாயி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.