திருமருகல் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றனா்.
திருமருகல் அருகேயுள்ள கரைப்பாக்கத்தைச் சோ்ந்தவா் முஜிபுர்ரஹ்மான் (42). இவா் குடும்பத்துடன் அக்.31-ஆம் தேதி இரவு காரைக்காலில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றாா். அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு திரும்பி நிலையில், வீட்டின் கதவை திறக்கும்போது உள்புறமாக பூட்டி இருப்பது தெரியவந்து. இதையடுத்து, பின்புறம் சென்று பாா்த்தபோது பின்புற கதவு உடைக்கப்பட்டு வீட்டுக்குள் வைத்திருந்த மடிக்கணினி, செல்லிடப்பேசிகள் மா்ம நபா்களால் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, திருக்கண்ணபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.