மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ஆன்மீக பேரவை, மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் சாா்பில் திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் திருவாடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் உத்தரவுப்படி ஸ்ரீகால பைரவருக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடைபெற்றது. விழாவில், ஸ்ரீகால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது.