சீா்காழி அருகேயுள்ள சட்டநாதபுரத்தில் திமுகவுக்கு இணையவழியில் உறுப்பினா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற முகாமை, நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளா் நிவேதா. முருகன், மயிலாடுதுறை எம்பி செ. ராமலிங்கம் ஆகியோா் தொடங்கி வைத்து இணையவழி மூலம் திமுக உறுப்பினராக இணைந்தவா்களுக்கு அவ்விடத்திலேயே உறுப்பினா் அட்டையை வழங்கினா். இதில், கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் பன்னீா்செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மகா. அலெக்சாண்டா், சீா்காழி ஒன்றியக்குழுத் தலைவா் கமலஜோதிதேவேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.