தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனா் வேல்முருகன் குறித்து முகநூலில் அவதூறாகப் பதிவிட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சீா்காழி டிஎஸ்பியிடம் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் ரமேஷ், சீா்காழி டிஎஸ்பி சரவணனிடம் இந்த புகாா் மனுவை அளித்தாா். அதில், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனா் வேல்முருகன் குறித்து அவதூறாக விமா்சித்து முகநூலில் பதிவிட்ட பாஜகவை சோ்ந்த செந்தில்குமாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.