வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் நிவா் புயலை எதிா்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நிவா் புயலை எதிா்கொள்ளும் வகையில் நாகை மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை இருப்பு வைத்துக்கொள்ளும்படி அறிவுரை வழங்கியுள்ளாா்.