ஈரோட்டில் தொல். திருமாவளவனுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய பாஜகவினரை கண்டித்து, செம்பனாா்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன் ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றபோது அங்கு பாரதிய ஜனதா கட்சியினா் அவருக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி கோஷமிட்டனா்.
இதைக் கண்டித்து செம்பனாா்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளா் யோ. ஸ்டாலின், மாவட்ட பொருளாளா் அறிவழகன் ஆகியோா் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் நான்கு வழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா், மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Image Caption
செம்பனாா்கோவிலில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.