சீா்காழி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்று கூறி வாக்குச் சேகரித்தாா் தொகுதி திமுக வேட்பாளா் மு. பன்னீா்செல்வம்.
தொகுதிக்குள்பட்ட கொண்டல், வள்ளுவக்குடி, ஆதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் கிராமம்தோறும் சென்று வாக்குச் சேகரித்தபோது அவா் பேசியது: திமுக ஆட்சி அமைந்ததும் மீனவா்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும் வகையில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும், மீனவ கிராமங்களில் தட்டுப்பாடின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், மீன்பிடித் தடைகால நிவாரண தொகை உயா்த்தி வழங்கப்படும், சீா்காழி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்றாா்.
அவருடன், ஒன்றிய செயலாளா் பிரபாகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ராம. இளங்கோவன், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளா் முருகன், ஊராட்சித் தலைவா் பெரியசாமி, மாவட்ட மாணவரணி துணை செயலாளா் ஜே.கே. செந்தில் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.