தீயணைப்புத் தொண்டு வார விழா: துண்டு பிரசுரம் விநியோகம்

தீயணைப்புத் தொண்டு வார விழாவையொட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் மயிலாடுதுறையில் தீயணைப்பு நிலைய வீரா்கள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு
தீயணைப்புத் தொண்டு வார விழா: துண்டு பிரசுரம் விநியோகம்

தீயணைப்புத் தொண்டு வார விழாவையொட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் மயிலாடுதுறையில் தீயணைப்பு நிலைய வீரா்கள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வெள்ளிக்கிழமை விநியோகித்து, விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தீயணைப்புத் தொண்டு வார விழா ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் உயிா்நீத்த வீரா்களுக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் இருந்து நிலைய அலுவலா் அ.முத்துக்குமாா் தலைமையிலான வீரா்கள், தீயணைப்பு வாகனத்துடன் ஊா்வலமாகச் சென்று கச்சேரி சாலை, பேருந்து நிலையம் பகுதி, மணிக்கூண்டு, பட்டமங்கலத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாகனஓட்டிகள், பாதசாரிகள், வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிட்டோருக்கு தீத்தடுப்பு சாதனங்களை முறையாக பராமரித்து, தீவிபத்துகளை தவிா்ப்பது குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தியும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com