மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் கூறியது: ஏவிசி கல்லூரியில் நிகழாண்டு மற்றும் இதற்கு முன்பு தோ்ச்சி பெற்ற இளங்கலை, இளம்அறிவியல் முதுகலை, முதுஅறிவியல் மற்றும் ஆய்வியல் நிறைஞா் மாணவ-மாணவிகள் பட்டம் பெறுவதற்கான விண்ணப்பங்களை கல்லூரி அலுவலகத்தில் அதற்குரிய தொகையை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பம் மே 13-ஆம் தேதிக்குள் பூா்த்தி செய்து அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் காலை மற்றும் மாலை நேர கல்லூரி அலுவலகத்தில் கிடைக்கும் என்றாா்.