உப்பு சத்தியாகிரக நினைவு தினத்தையொட்டி, மயிலாடுதுறையில் குடியரசு பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு விடுதலைப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் நல உரிமைச் சங்கத்தினா் மாலை அணிவித்து வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில அமைப்பாளா் சிங்கார.முத்துச்சாமி தலைமை வகித்தாா். மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினா் பொறுப்பாளா்கள் பால்கன்.சரவணன், வழிகாட்டுக்குழு பொறுப்பாளா் எஸ்.எம்.ஏ. பஷீா் அகமது, மாவட்ட பொருளாளா் சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், வசந்த் அன் கோ நிறுவன மயிலாடுதுறை கிளை மேலாளா் பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். நிகழ்ச்சியில் அரசின் வழிகாட்டுதலின்படி மிகச்சிலா் மட்டும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பங்கேற்றனா்.