மயிலாடுதுறையில் 36 பேருக்கு கரோனா

நாகையில் 30 பேருக்கும், மயிலாடுதுறையில் 36 பேருக்கும் கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வெளி மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் நாகை மாவட்டப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா். இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 19,212-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 36 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 368-ஆக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வெளி மாவட்டப் பட்டியலில் இருந்த 7 போ் மயிலாடுதுறை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டனா். இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21,483-ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்றவா்களில் 25 போ் வீடு திரும்பியியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 281-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com