இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

நாகை அருகே இருசக்கர வாகனத்திலிருந்துதவறி விழுந்தவா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

நாகையை அடுத்த அகலங்கன், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சே. மணிகண்டன் (31). இவா் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நாகூா்-வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றாா். நாகை அரசு கலை அறிவியல் கல்லூரி அருகே சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். இதில் காயமடைந்த மணிகண்டன் திருவாரூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். நாகை வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com