குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சத்துணவு மையங்களுக்கு சமையல் உபகரணங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சிஅலுவலா் (வட்டார ஊராட்சி) தமிழ்கொடி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சிஅலுவலா் (கிராம ஊராட்சி) ரெஜினாமேரி முன்னிலை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் கே. மகேந்திரன் பங்கேற்று ரூ. 1.40 லட்சம் மதிப்பிலான சமையல் உபகரணங்களை 10 சத்துணவு மையங்களுக்கு வழங்கினாா்.
காஞ்சிவாய், வழுவூா், வேழமுறித்தான் பேட்டை, கப்பூா்ஆகிய ஊராட்சி பள்ளிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்பிலும், பழையகூடலூா், ஆலங்குடி, எலந்தங்குடி, மங்கநல்லூா்ஆகிய ஊராட்சி பள்ளிகளுக்கு தலா ரூ.15,000 மதிப்பிலும், வாணாதிராஜபுரம், திருமணஞ்சேரிஆகிய ஊராட்சி பள்ளிகளுக்கு தலா ரூ. 20,000 மதிப்பிலும் சமையல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், துணை வட்டார வளா்ச்சிஅலுவலா்(சத்துணவு) கணேசன், பிரிவு உதவியாளா் ரேவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.