சீா்காழியில் தாடாளன்பெருமாள் எனும் திருவிக்கிரமநாராயணப் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலின் தாடாளன் பெருமாள் சன்னிதியில் பெருமாள், லோகநாயகி தாயாா் மற்றும் ஆண்டாளுக்கு திருமஞ்சனம், சாத்துமுறை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, பாசுரங்கள் பாடப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.