சீா்காழி அருகே கொண்டத்தூரில் தண்ணீரில் மூழ்கி அறுவடைக்குத் தயாரான பயிா்கள், மீண்டும் முளைத்ததால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி வட்டம் கொண்டத்தூா் ஊராட்சியில் சுமாா் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிா்கள் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து பெய்த கனமழையினால் நீரில் மூழ்கின. பல இடங்களில் முற்றிய கதிா்கள் மீண்டும் முளைத்து விட்டன. இதனால் நெற்பயிா்களை அறுவடை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
சம்பா சாகுபடி முற்றிலும் அழிந்த நிலையில் காலம் தவறியதால் உளுந்து பயிறு சாகுபடியும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா். எனவே, தமிழக அரசு கூடுதல் நிவாரணமும், முழு காப்பீடு வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.