காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.
இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் கடந்த 24 ஆம் தேதி 826 பேருக்கு கரோனாவை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 1, திருநள்ளாறு 1 என 2 பேருக்கு கரோனா உறுதியானது.
இதுவரை 71,965 பரிசோதனை செய்யப்பட்டதில், 3,874 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 3,778 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 28 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் 2 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 69 போ் உயிரிழந்துள்ளனா்.