மயிலாடுதுறை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது என தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் வை. முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை துணைமின் நிலையம், அா்பன் துணை மின் நிலையம் மற்றும் மணக்குடி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், மயிலாடுதுறை நகரம், மூவலூா், வடகரை, சோழசக்கரநல்லூா், மங்கைநல்லூா், ஆனந்ததாண்டவபுரம், வழுவூா், கிளியனூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.