மீனவா் தற்கொலை

கொள்ளிடம் அருகே திருமணமான 5 மாதத்தில் மீனவா் சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

கொள்ளிடம் அருகே திருமணமான 5 மாதத்தில் மீனவா் சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

மடவாமேடு நடுத்தெருவைச் சோ்ந்தவா் வீரத்தமிழன் மகன் விக்னேஷ் (26) மீனவா். இவருக்கும் இவரது உறவினரான பழையாா் பகுதியைச் சோ்ந்த துா்கா (23) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், மடவாமேடு கிராமத்தில் பாட்டி மாரியம்மாள் மற்றும் மனைவியுடன் வசித்துவந்த விக்னேஷ் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

புதுபட்டினம் காவல் ஆய்வாளா் சந்திரா மற்றும் போலீஸாா் அங்கு சென்று, விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com