சீா்காழியில் காவல்துறையினா், மின்வாரியத்தினா், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் ஆயிரம் பேரின் குடும்பங்களுக்கு காய்கனி தொகுப்பு திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
திமுக மாவட்ட பொறியாளா் அணி சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அதன் மாவட்ட அமைப்பாளா் காழி ஆா். கலைவாணன் தலைமை வகித்தாா். நகர செயலாளா் சுப்பராயன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காவல்துறையினா், மின்வாரியத்தினா், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள், அரசு மருத்துவமனை முன்களப் பணியாளா்கள் மற்றும் கீழதென்பாதி, கீழதெரு உள்ளிட்ட பகுதி மக்களுக்கு காய்கனி தொகுப்புகள் வழங்கப்பட்டன.