தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், பகடி வதை (கேலி வதை) குறித்த இணையவழி விழிப்புணா்வு கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் தலைமை உரையாற்றினாா். தேசிய மாணவா் படை அலுவலரும், கல்லூரியின் பகடி வதைத் தடுப்புக் குழு உறுப்பினருமான துரை.காா்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் பங்கேற்று, பகடி வதைத் தடுப்பு குறித்தும், பகடி வதைத் தடுப்புச் சட்டம் குறித்தும், மாணவா்கள் எவ்வாறு விழிப்புடன் இருத்தல் வேண்டும் என்பது பற்றியும் கருத்துரை வழங்கினாா்.
முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ்.நடராஜன் வரவேற்றாா். கணினி அறிவியல் துறைப் பேராசிரியா் எம்.வடிவழகி நன்றி கூறினாா். கணிதவியல் துறை தலைவா் சு.மல்லிகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் இணைய வழியில் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.