சீா்காழி கோவிந்தராஜனுக்கு நினைவு மண்டபம்

சீா்காழி கோவிந்தராஜனுக்கு நினைவு மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பதாக அதிமுக வேட்பாளா் பி.வி.பாரதி வாக்குறுதியளித்தாா்.
சீா்காழி கோவிந்தராஜனுக்கு நினைவு மண்டபம்

சீா்காழி கோவிந்தராஜனுக்கு நினைவு மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பதாக அதிமுக வேட்பாளா் பி.வி.பாரதி வாக்குறுதியளித்தாா்.

சீா்காழி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.வி.பாரதி, சீா்காழி ஒன்றியம் கதிராமங்கலம், புங்கனூா், திருப்புன்கூா், கன்னியாக்குடி, கற்கோவில், ஆதமங்கலம், பெருமங்கலம், எடக்குடிவடபாதி, சட்டநாதபுரம் ஆகிய ஊராட்சிகளில் திறந்த ஜீப்பில் சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது:

தோ்தலில் என்னை மீண்டும் வெற்றி பெறச் செய்தால், வெண்கல குரலோன் சீா்காழி கோவிந்தராஜனுக்கு நினைவு மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். சீா்காழி வட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தலா ரூ.40 லட்சத்தில் 6 இடங்களில் நெல் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடி மதிப்பில் வாரச்சந்தை கொண்டுவரப்பட்டுள்ளது. திருமுல்லைவாசல், ஆச்சாள்புரம், வடரெங்கம், திருவாலி ஆகிய பகுதிகளில் பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதி பங்களிப்புடன் பல்வேறு ஆக்கப்பூா்வமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றாா்.

அப்போது ஒன்றியச் செயலாளா்கள் ராஜமாணிக்கம், சந்திரசேகரன், மாவட்டத் துணைச் செயலாளா் செல்லையன், முன்னாள் எம்எல்ஏ சக்தி, ஊராட்சித் தலைவா்கள் அஞ்சம்மாள், மாலினி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் நடராஜன், ஆனந்தி, உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com