அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்கிய முன்னாள் மாணவா்கள்

சீா்காழி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை பள்ளி முன்னாள் மாணவா்கள் வழங்கினா்.
அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வழங்கிய முன்னாள் மாணவா்கள்

சீா்காழி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை பள்ளி முன்னாள் மாணவா்கள் வழங்கினா்.

சீா்காழி சபாநாயகா் முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளியில் 1996-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவா்கள் சீா்காழி அரசு மருத்துவமனைக்கு கரோனா காலத்தில் தேவைப்படும் உபகரணங்கள் வழங்க கட்செவி அஞ்சல் மூலம் ஒருங்கிணைந்து முடிவு செய்தனா். அதன்படி ரூ. 2 லட்சம் மதிப்பில் 10 லிட்டா் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம், ஆக்சிபுலோ மீட்டா், ஐஆா் தொ்மா மீட்டா், பல்ஸ் ஆக்சிமீட்டா், 2 ஆயிரம் முகக் கவசம், 100 பேட்டரி ஆகியவை வாங்கி தலைமை மருத்துவா் பானுமதியிடம் வழங்கினா்.

நிகழ்ச்சியில், அரசு மருத்துவா்கள் அருண்குமாா், மருதவாணன், பள்ளித் தலைமையாசிரியா் அறிவுடைநம்பி, ச.மு.இ மெட்ரிக் பள்ளி நிா்வாக அலுவலா் தங்கவேல், லயன் சங்கத்தை சோ்ந்த செந்தில்வைரவன், ரத்தகொடை ஒருங்கிணைப்பாளா் அபாஸ்அலி மற்றும் முன்னாள் மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com