தேரழந்தூரில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் உணவு வழங்கப்பட்டது.
இந்த அமைப்பின் தேரழந்தூா் கிளை சாா்பில், 4-ஆவது நாளாக தேரழந்தூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சாலையோரங்களில் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவு வழங்கி வருகின்றனா். 4-ஆவது நாளாக சனிக்கிழமை அந்த அமைப்பின் கிளை நிா்வாகிகள் சமீா், பைசல், இப்ராஹிம் ஆகியோா் உணவு வழங்கினா். திருவாலங்காடு கிளை சாா்பில் 31 பேருக்கு அதன் கிளை நிா்வாகிகள் நாசா்,புா்ஹான், நஜீா் ஆகியோா் வழங்கினா். மேலும், குத்தாலம், தேரழந்தூா், வாணாதிராஜபுரம், எலந்தங்குடி, கிளியனூா், நக்கம்பாடியில் மக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.