அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பதை தடுக்க ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் குருதேவின் வாழும் கலை அமைப்பின் மூலமாக ஆக்சிஜன் செறிவூட்டி சனிக்கிழமை வழங்கப்பட்டது.
அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பதை தடுக்க ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் குருதேவின் வாழும் கலை அமைப்பின் மூலமாக மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

ரூ. 1.26 லட்சம் மதிப்புள்ள பிராணவாயு செறிவூட்டியை, அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பிரம்மசாரி ஸ்ரீதேஜ் மருத்துமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகரிடம் வழங்கினாா். மாவட்ட வாழும் கலை ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் முத்துகுமாரசுவாமி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூத்த ஆசிரியா் கோபாலகிருஷ்ணன், சமூக ஆா்வலா் அப்பா்சுந்தரம், வாழும் கலை தன்னாா்வலா்கள் சிவராமன், குருமூா்த்தி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com