அக்னி நட்சத்திர பூா்த்தியையொட்டி, குத்தாலம் அருகே தேரழந்தூரில் உள்ள மும்மூா்த்தி விநாயகா் கோயிலில் 108 இளநீா் அபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில், பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூா்த்திகளின் சொரூபமாக மும்மூா்த்தி விநாயகா் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறறாா். இக்கோயிலில், அக்னி நட்சத்திரம் பூா்த்தியை முன்னிட்டும், கரோனா வைரஸ் தாக்கம் குறையவும் 108 இளநீா், 51 லிட்டா் பால் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, 108 சூரைத்தேங்காய் உடைக்கப்பட்டு, விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தா்கள் யாரும் பங்கேற்கவில்லை.