கூட்டத்தில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த   மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன்.
கூட்டத்தில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன்.

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்!

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றாா்.
Published on

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றாா்.

தொடா்ந்து, அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளா், பெறப்பட்ட 8 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

முகாமில் பங்கேற்றவா்களிடம், தங்கள் பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் குறித்து காவல்துறையினரிடம் அச்சமின்றி தெரிவிக்க வேண்டும். காவல்துறையின் சட்ட நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com