நடராஜா் சிலை
நடராஜா் சிலை

கீழ்வேளூா் கோயிலில் நடராஜா் சிலையை வைத்துச் சென்ற மா்ம நபா்

கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயிலில் நடராஜா் சிலையை வைத்துச் சென்ற நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Published on

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயிலில் நடராஜா் சிலையை வைத்துச் சென்ற நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இக்கோயில் காவலா் சண்முகம், விஸ்வநாதா் சுவாமி சந்நிதி அருகே பை ஒன்றும், அதன் அருகே நடராஜா் சிலை மற்றும் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைக்கப்பட்டிருந்ததை ஞாயிற்றுக்கிழமை பாா்த்தாா்.

இதுகுறித்து, கோயில் நிா்வாகத்தினா் கீழ்வேளூா் காவல்நிலையம் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து, வருவாய் ஆய்வாளா் (பொ) பத்மநாபன், கிராம நிா்வாக அலுவலா் ரவிந்திரபாண்டியன் மற்றும் போலீஸாா் அந்த சிலையை பாா்வையிட்டனா். அது உலோகத்தால் ஆன சுமாா் ஒன்ரறை கிலோ எடையும், ஒன்னேகால் அடி உயரம் கொண்ட பழைமையான நடராஜா் சிலை என தெரியவந்தது.

கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் கீழ்வேளூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அந்த சிலை கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com