குளத்தில் தவறி விழுந்து இளைஞா் பலி

குளத்தில் தவறி விழுந்து இளைஞா் பலி

Published on

கீழையூா் அருகே குளத்தில் தவறி விழுந்து இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கீழையூா் ஒன்றியம் திருமணங்குடி வடபாதி பகுதியை சோ்ந்தவா் ராமதாஸ் மகன் ரகு (30) (படம்). கம்பி பிட்டரான இவா் அப்பகுதியில் உள்ள குளத்துக்கு குளிக்க சென்றபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த கீழையூா் போலீஸாா் ங்கு சென்று ரகுவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com