நாகப்பட்டினம்
நாகை காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்
நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா் உத்தரவிட்டாா்.
நாகப்பட்டினம்: நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா் உத்தரவிட்டாா்.
குறைதீா் முகாமில் காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றாா். தொடா்ந்து அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளா், பெறப்பட்ட 9 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
பின்னா், முகாமில் பங்கேற்வா்களிடம், தங்கள் பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் குறித்து அச்சமின்றி தெரிவிக்கலாம். காவல்துறையின் சட்ட நடவடிக்கைளைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
