காரைக்கால் புனித வனத்து சின்னப்பர் ஆலய திருவிழா நிறைவாக மின் அலங்கார தேர் பவனி புதன்கிழமை இரவு நடைபெற்றது.
காரைக்கால் கல்லறைத் தெருவில் அமைந்துள்ள புனித வனத்து சின்னப்பர் ஆலய ஆண்டுத் திருவிழா கடந்த மாதம் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூன் 1-ஆம் தேதி சிறிய தேர் பவனியும், 7-ஆம் தேதி வரை மாலை நவநாள் திருப்பலியும் நடைபெற்றது.
நிறைவு நிகழ்ச்சியாக புதன்கிழமை இரவு கோட்டுச்சேரி பங்குத் தந்தை எல்.ஜெரால்டு தலைமையில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு, மின் அலங்கார பெரிய தேர் பவனி நடைபெற்றது. திரளான மக்கள் தேர் பவனியில் கலந்துகொண்டனர்.
திருவிழா நிறைவாக வியாழக்கிழமை காலை காரைக்கால் பங்குத் தந்தை ஆண்டனி லூர்துராஜ் தலைமையில் திருப்பலி நடத்தப்பட்டு கொடியிறக்கம் செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராமப் பஞ்சாயத்தார்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.