விபத்தில் சிக்கியவர் சாவு

காரைக்காலில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, அடையாளம் தெரியாதவர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
Updated on
1 min read

காரைக்காலில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, அடையாளம் தெரியாதவர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருநள்ளாறு சாலையில் கடந்த 2-ஆம் தேதி சாலையை கடக்க முற்பட்டபோது நடந்த விபத்தில், சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர் படுகாயமடைந்தார். இவர் பெயர், ஊர் உள்ளிட்ட விவரம் தெரியவில்லை. இவர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை உயிரிழந்தார். இவர் மெலிந்த உடல், மீசை, குறுந்தாடி, மார்பில் மச்சம் உள்ளதாக போலீஸார் அவரது அடையாளங்களை வெளியிட்டுள்ளனர். இவரது விவரம் அறிந்தோர், காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலையம் 04368-223299 அல்லது கட்டுப்பாட்டு அறை 223100 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com